தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா?
coming 30 local holiday in thanjavur district
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவிற்கான பந்தகால் நடும் நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது.
அன்றைய தினம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னர், ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர்.

இந்த நிலையில் வரும் 30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
"தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு 26.012024 முதல் 30.012024 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு எதிர்வரும் 30.012024 (செவ்வாய் கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி (10.02.2024 ) சனிக்கிழமை பணி நாளாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 30 local holiday in thanjavur district