பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் பலி: வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் இரவு பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்று கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கோயம்புத்தூர், சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். 

இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து உணவகம் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அறைக்கு சென்ற மாணவர் ஹேமச்சந்திரன் இன்று காலை அசைவின்றி கிடந்துள்ளார். 

 

இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய போது மரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died heart attack after eating paratha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->