மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்.!
collector announcement
வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று மாலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் வானம் இருண்டு காணப்பட்டன. இந்தநிலையில் இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது.
போரூர், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, மீனம்பாக்கம்,மெரினா, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அலுவலகத்துக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியே செல்கின்றனர். கனமழையால் தாழ்வான இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில், சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.