சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான கொகைன் பறிமுதல்!
Cocaine worth Rs 70 crore seized at Chennai airport
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றது. சுமார் ரூ.60 முதல் 70 கோடி மதிப்பிலான 5.6 கிலோ கிராம் கொகைன், நாதன முறையில் கடத்தி வரப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
எத்தியோப்பியாவில் இருந்து வந்த இரண்டு இந்தியர்கள், இந்த கொகைனை சென்னைக்கு கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இருவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகம் வராமல் இருக்க, பிரபல வெளிநாட்டு சாக்லேட் ‘Ferrero Rocher’ தங்க நிற தாளில் கொகைனை சுற்றி, பெட்டிகளில் அடைத்து கடத்தப்பட்டிருந்தது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கொகைன் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்குடன் தொடர்புடையது என்பதும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பதும் வெளிச்சம் கண்டுள்ளது.
அண்மையில், இதேபோல் வெளிநாட்டு சாக்லேட் போர்வையில் மறைத்து கடத்தப்பட்ட 5.4 கிலோ கிராம் கொகைன், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cocaine worth Rs 70 crore seized at Chennai airport