இரு தரப்பு மாணவர்களிடையே மோதல்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.!
clash between school students
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பு மாணவர்கள் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து மற்றொரு தரப்பு பள்ளி மாணவர்களைத் தாக்கியுள்ளனர். அதன்பிறகு இருதரப்பினரும் மோதிக் கொண்ட போது கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அவர்கள் வீசிய கற்கள் அருகில் உள்ள கடைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சென்றது. அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் தலையில் கல் பட்டதால் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு மருத்துமனையில் அனுமதித்தனர்.
இந்த மோதல் குறித்து தகவல் அறிந்து விரைந்துவந்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
clash between school students