தமிழகத்தில் குழந்தை திருமணம் நடப்பது 'இந்த மாவட்டம்' தான் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணி புரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு பயிற்சியாளர் பெலிக்ஸ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது,

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடை நிவர்த்தி சட்டம், 2013-ன் படி அமைக்கப்பட வேண்டிய குழு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த ஆலோசனை கோட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர். 

* மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஒன்றியங்களிலும் 10 பேருக்கு அதிகமாக பணி செய்யும் இடங்களில் குழுக்களை அமைக்க வேண்டும்.
* 10 பேருக்கு குறைவாக பணி செய்யும், இடங்களில் குழு பற்றிய விழிப்புணர்வு அளிக்கவும் பாலியல் ரீதியான புகார்களை பெற்று அதிகாரிகள் மூலம் மாவட்ட உள் குழுவுக்கு அனுப்புவது
என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இறுதியாக "ஊராட்சி ஒன்றியங்களில் இந்த விழிப்புணர்வை தீவிர படுத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு களை தடுப்போம்" என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

child marriages dindigul district tops


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->