நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று திமுகவினர் நினைக்க வேண்டும் - முதலவர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று திமுகவினர் நினைக்க வேண்டும் - முதலவர் ஸ்டாலின்.!

இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவலாயத்தில், திமுக விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

‘’கடந்த 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அறிஞர் அண்ணா பொறுப்பேற்றப் பிறகுதான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதனால், நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று திமுகவினர் நினைக்க வேண்டும். 

இந்தியாவை காப்பாற்ற அனைவரும் தயாரா இருக்கவேண்டும். வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகளை நாம் அமைக்க வேண்டும். 

அதனை மிகச் சரியாகச் செய்தால் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். நிதி நிலைமை மற்றும் மத்திய அரசு நமக்கு துணையாக நிற்காவிட்டாலும்,  நாம் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். 

நாட்டிலேயே நம்பர் ஒன் மாநிலம் மாநிலம் மற்றும் நம்பர் ஒன் முதல்வர் என்ற பெருமையை பெறும் அளவிற்கு நாம் வளர்ந்து வந்துள்ளோம். நமக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும் கூட சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளோம்’’ என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin speach in nalla sethupathi home marriage function in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->