தமிழகத்தை குளிர்விக்க போகும் மழை.. வானிலை மையம் அதிரடி அறிவிப்பு.!!
Chennai regional meteorological center announce rain
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 4 சென்டி மீட்டர் மழையும், சென்னை அயனாவரம், பெரம்பூரில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும், கோயம்புத்தூர் வால்பாறை, சின்னக்கல்லார், சோலையார், பெரம்பலூர் மாவட்டத்தின் இறையூர், சேலம் மாவட்டத்தின் மேட்டூரில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஜூன் இரண்டாம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில், லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா கடற்கரைப்பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், இங்கு மணிக்கு சூறாவளிக்காற்று 50 கிலோமீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai regional meteorological center announce rain