புழல் சிறையில் கைதிகள் தாக்குதல்: போலீசார் படுகாயம்! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் பயன்படுத்தியதாக கூறப்படும் செல்போன் மற்றும் சார்ஜரை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, இன்று மீண்டும் சோதனை நடத்த முயன்றபோது, கைதிகள் காவலர்களை தாக்கினர்.

இந்த தாக்குதலின்போது, சிறைக்காவலர்கள் மணிகண்டன் மற்றும் சாந்தகுமார் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறையில் கைதிகள் காவலர்களை தாக்கிய விவகாரம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai puzhal jail attack police injury


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->