#BigBreaking | சென்னை அருகே போலீசார் மீது துப்பாக்கி சூடு.! கொடூரன் ஒருவனை என்கவுண்டரில் போட்டு தள்ளிய போலீஸ்.!
chennai police encounder in kanjipuram
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் துளசிதாஸ், ராம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 ஆம் தேதி வழக்கம் போல் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கிளம்பும் போது துளசிதாஸை, டாஸ்மாக் கடையின் வாசலில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.
மேலும், இந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் மற்றொரு ஊழியரான ராம் என்பவரையும் கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். படுகாயமடைந்த ராம்.,யை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று ராம் உடலிலிருந்து துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்த படுகொலை சம்பவத்தில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த படுகொலை சம்பவம் எந்த காரணத்துக்காக செய்யப்பட்டது என்று, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே இரண்டு வடமாநில இளைஞர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த வயதான பெண்ணிடம் நகையை பறித்து தப்பிச் செல்ல முயன்று உள்ளனர்.
அப்போது பொதுமக்கள் அந்த இரண்டு வடமாநில இளைஞர்களை துரத்தி பிடிக்கும்போது, கை துப்பாக்கியை காட்டி பொதுமக்களை விரட்டி உள்ளார்கள். இது சம்பந்தமாக காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப் பட்டது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியை மேற்கொண்டனர். தப்பி ஓடிய கொள்ளையர்கள் ஏரியில் சென்று பதுங்கிக் கொண்டதால், ட்ரோன் மூலமாகவும், போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் போலீசாருக்கும் கொள்ளையர்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தசா என்ற கொள்ளையன் என்கவுண்டரில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொள்ளையன் சுட்டதில் போலீசார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
English Summary
chennai police encounder in kanjipuram