#BigBreaking | அடுத்த 2 மணி நேரத்துக்கு., தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.!
chennai imd alert oct 17
தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த அறிவிப்பில் தகவல் தெரிவித்து இருந்தது.
மேலும், வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி முதல் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகம் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு மணிநேரத்திற்கு (மாலை 3.30 முதல் 6.30 வரை) இடியுடன் கூடிய கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தென்காசி, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.