#சென்னை | பெண் கஞ்சா வியாபாரி ரமா மீது குண்டர் தடுப்பு சட்டம்.! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியைச் சேர்ந்த ரமா என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது குறித்து தகவல் அறிந்த எம்.கே.பி. நகர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பெண் கஞ்சா வியாபாரி ரமா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதனை போன்றே கொலை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற விவகாரத்தில் சிக்கிய 20 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் சென்னையில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 244 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai ganja case lady rama


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->