சென்னையில் குவிக்கப்பட்ட போலீஸ்! ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை... முதல் நினைவு நாள்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் தன்னுடைய வீட்டருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்மீது விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கொடூரக் கொலைக்கு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் நினைவுநாளை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன. முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பதற்றம் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு காவல் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி சற்றுமுன் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai BSP Armstrong TN Police


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->