பார் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து... 3 பேர் உயிரிழப்பு: பிடிபட்ட மேலாளர்.!  - Seithipunal
Seithipunal


சென்னை, ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் இயங்கி வந்த பிரபல மதுபான கேளிக்கை விடுதிக்கு தொழில் அதிபர்கள், ஐ.டி. ஊழியர்கள் நிறுவனத்திற்கு வந்து செல்வது வழக்கம். 

அதேபோல் நேற்று விடுதி உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருந்த போது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. 

இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் அலறியடித்து வெளியேறினர். இருப்பினும் கட்டிட இடுப்பாடுகளில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்கும் பணியில் ஈடுட்டனர். 

மேலும் மீட்பு பணியை மேற்கொள்ள போதிய அளவு வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு படை வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் அவர்களது உடல்கள் மீட்கபட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அணிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து கேளிக்கை விடுதி மேலாளர் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள விடுதி உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Bar collapse accident 3 people killed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->