#சென்னை || பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.! பதரவைக்கும் வீடியோ கட்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை அமைந்தகரை அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அடங்கிய காணொளி காட்சிகள், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காணொளியில் வெட்டப்பட்ட நபர் உயிருக்கு போராடும் காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெட்டியவர்கள் தப்பி ஓடிய அந்த சம்பவங்களும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

வெளியான முதல் கட்ட தகவலின்படி அமைந்தகரை, செனாய் நகர் பூங்காவுக்கு பின்புறம் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை, திடீரென ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியிருக்கிறார்கள்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை, கொலை செய்யும் நோக்கில் அவரின் தலையில் மட்டும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து சென்னை அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெட்டப்பட்ட நபர் தற்போது சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பேச முடியாத ஒரு நிலையில், தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் முன்பகை காரணமாக நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai amainthakarai young man attempt murder


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->