பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திடீர் மாற்றம் - அதிர்ச்சியில் மாணவர்கள்.!
changes in 10 students public exam
தமிழை தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

அந்த வகையில், விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், மொழி சிறுபான்மை பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியலுடன் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் சான்றிதழில் அச்சிட்டு தரப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
changes in 10 students public exam