டெல்டா மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


டெல்டா மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் மிதமானது முதல் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில்  மார்ச் 2ம் தேதி கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும், புதுக்கோட்டை, தூத்துகுடி, திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 28.02.2022 முதல் 01.03.2020 வரை தமிழகம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவும் என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of heavy rain on March 2 in delta districts


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->