அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 100% தேர்ச்சி! நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு! - Seithipunal
Seithipunal


மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில், வயது வந்தோருக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

எழுத்தறிவு இல்லாத 1.77 கோடி பேர் இத்தேர்வுக்கு பதிவு செய்தனர். அவர்களுக்கு முன்னதாக பயிற்சி வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில், 34.31 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 5.09 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்றதையடுத்து, தமிழ்நாடு 100 சதவீதத் தேர்ச்சியுடன் நாடு முழுவதும் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்குப் பின்பு திரிபுரா இரண்டாம் இடத்தையும், டெல்லி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இத்தேர்வு வாயிலாக எழுத்தறிவும் எண்ணறிவும் பெறும் பயணத்தில் தமிழ்நாடு முன்னோடியான சாதனை படைத்துள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Government TN basic education ratio


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->