கொடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி மீண்டும் சம்மன்.!!
Cbcid sent summon to 4 person in Kodanadu case
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குரநாடு பங்களாவில் அரங்கேற்றப்பட்ட கொலை கொள்ளை சம்பவம் வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் விசாரணைக்காக ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் என்பவரை தவிர மீதமுள்ள 9 பேர் ஆஜராகவில்லை.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றம். இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்துக்கு நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ரமேஷ், தேவன், ரவிக்குமார், அப்துல் காதர் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகாததால் மீண்டும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
English Summary
Cbcid sent summon to 4 person in Kodanadu case