முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு..! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

உடனே அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதேபோன்று மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜகவினர் 417 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file on ex minister jayakumar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->