#திண்டுக்கல் || கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இரண்டு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து.! 8 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இரண்டு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை தடுப்பில் மோதி சாலையின் மற்றொரு பாதைக்குள் சென்று எதிரே வந்த 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car accident in Dindigul


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->