#திண்டுக்கல் || வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட நான்கு பேர் கைது - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் கஞ்சா பகுதிக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாக தென்மண்டல ஐ.ஜி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர், செட்டிநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை செய்ததில் சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கு வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் கஞ்சா விற்பனை செய்த வைரவன்(28), அவரது மனைவி நவீனா(22), சுந்தரபாண்டி(35) மற்றும் முத்துக்கருப்பன்(20) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrested in Dindigul


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->