கஞ்சா விற்பனை செய்த தனியார் கல்லூரி மாணவர் உட்பட ஐந்து பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த தனியார் கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மேலப்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மேலபட்டியை சேர்ந்த ரோஸி, பீட்டர், பேகம்பூரை சேர்ந்த சுல்தான் அலாவுதீன், செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிவேல் மற்றும் தனியார் கல்லூரி மாணவர் சக்திவேல் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்தததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 கிலோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrested in Dindigul


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->