திருச்சி: கஞ்சா விற்ற 3 இளைஞர்கள் கைது - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி பழைய ஆர்டிஓ அலுவலக பகுதியில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களிடமிருந்த கட்டப்பையை சோதனை செய்ததில், கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், தொட்டியம் திருநாராயணபுரம் பகுதியை சேர்ந்த ராகுல்(23), கோகுல்நாத்(19) மற்றும் அரசலூர் பகுதியை சேர்ந்த வசந்த்(23) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrest in tiruchi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->