விஜய்னு சொல்ல கூடாது - சர்ச்சையை கிளப்பிய புஸ்ஸி ஆனந்த்.! - Seithipunal
Seithipunal


விஜய்னு சொல்ல கூடாது - சர்ச்சையை கிளப்பிய புஸ்ஸி ஆனந்த்.!

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

அப்போது, தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும், மகளிர் அணியை சிறப்பாக கட்டமைப்பதற்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மகளிரணி தலைவிகள் செயல்பட வேண்டும். 

இந்தக் கூட்டத்தில் இருப்போர் தளபதியைப் பார்க்க வந்திருப்பதாகக் தெரிவித்தார்கள். தளபதி ஊரில் இல்லை என்று கூறிதான் உங்களை இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்" என்றுத் தெரிவித்தார்.  மேலும், அவர் இந்த மாதம் 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதையும் உறுதி செய்துள்ளார்.

அப்போது, மக்கள் இயக்க பெண் நிர்வாகி ஒருவர், ’நான் மிகப்பெரிய விஜய் ரசிகை’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு புஸ்ஸி ஆனந்த், ’தலைவன் பெயரைச் சொல்லக்கூடாது. 'தளபதி' என்று மட்டும்தான் சொல்ல வேண்டும்’ என்று சொல்லியிருப்பது சற்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bussy anand speech about vijay


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->