தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: மணமகன் வீட்டார் அதிர்ச்சி..!
Bride stops wedding during talisman ceremony
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவருக்கு திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டாரும் செய்ய வேண்டிய வரதட்சணை குறித்தும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி முடிக்கப்பட்டன.
இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமண ஏற்பாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற போது மணமகனின் பெற்றோருக்கும், மணமகளின் பெற்றோருக்கும் சிறு, சிறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

அதன் பின்னர் உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்த பிறகு திருமண சடங்குகள் இரவு முழுவதும் நடந்துள்ளது. நேற்று காலை மணமேடைக்கு மணமகனும், மணமகளும் அமர வைக்கப்பட்டு, தாலிகட்டும் முன் நடக்க வேண்டிய சடங்குகள் நடந்துள்ளன.
அப்போது, மணமகன் தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டப் போன நேரத்தில் திடீரென மணமகள் எழுந்து, ‘இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை’ என மாலையை கழற்றி வைத்துவிட்டு மணமகள் அறைக்கு சென்றுவிட்டார். இதனால், திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்ததோடு, திருமணத்திற்கு வந்த இருதரப்பு உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இறுதியில் மணமகன் பெற்றோர் மற்றும் மணமகள் பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியத்தில், சுமூகமான முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து திருமணம் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் மணமகன் தரப்பில் இருந்து பெண் வீட்டாரிடம் திருமணத்திற்கு செய்த செலவை தரவேண்டும் என கேட்டனர். மணமகள் குடும்பத்தினரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனால், திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், மற்றும் உள்ளூர்காரர்கள் அதிர்ச்சியுடன் வீடு திரும்பியுள்ளனர். திடீரென மணமேடையில் இருந்து மணப்பெண் தாலி கேட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bride stops wedding during talisman ceremony