ஓடும் ரயிலில் சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 13 வயது சிறுமி தனது அம்மாவுடன் பயணித்துள்ளார். இந்த ரயில் சேலத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது கோயம்புத்தூரை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து சக பயணிகள் பார்த்திபனை பிடித்து ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை செய்த ரயில்வே போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy sexual Harrasment for child in train


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->