பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்..போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் செபஸ்டியன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி செபாஸ்டியன் அந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இதனையடுத்து இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் அரியலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy cheat school girl pregnant


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->