தேனி : காதலிக்க மறுத்த இளம் பெண்.. பெற்றோர் முன்னே கத்தியால் குத்திய இளைஞர்.! - Seithipunal
Seithipunal


காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25) இவர் அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இவர் தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் இளைஞர் அந்த பெண்ணிடம் காதலை கூறிய நிலையில், அந்த இளம் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெற்றோர் முன்பு தான் வைத்திருந்த கத்தியை கொண்டு இளம் பெண்ணின் கழுத்து, முதுகு மற்றும் கைகளில் தொடர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் பெரியகுளம் காவல் நிலைய போலீஸாரிடம் இளைஞரை ஒப்படைத்தனர்.

இதனிடையே படுகாயமடைந்த இளம் பெண் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காதலிக்க மறுத்த இளம் பெண்ணை வீட்டிலேயே சென்று இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy brutal attack of college student


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->