சென்னையில் ஆண் குழந்தை கடத்தல் - இளம்பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் - நிஷாந்தி தம்பதியினருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனை குடும்பத்தினர் பத்திரமாக பாத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு பெண் ஒருவர், குழந்தையின் தாய் நிஷாந்தியிடம், தான் ஒரு அரசு ஊழியர் எனக்கூறி பிறந்த குழந்தைகளுக்காக அரசு அறிவித்துள்ள திட்டத்தில் உன்னுடைய குழந்தையை சேர்த்தால் உதவி தொகைகள் கிடைக்கும். 

இதற்காக என்னுடன் தி.நகருக்கு குழந்தையோடு வர வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய நிஷாந்தியும் தன்னுடைய குழந்தையோடு அந்தப் பெண்ணுடன் தி.நகருக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். அங்கு ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில் குழந்தையுடன் அந்த பெண் மாயமானார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குழந்தையை கடத்திய பெண், தனது துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. 

இதையடுத்து போலீசார் குழந்தையைக் கடத்திய பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர். சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy baby kidnape in chennai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->