ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர சோதனை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு பேருந்து நிலையம் ரயில் நிலையம் மணிக்கூண்டு போன்ற முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக சென்னை போலீசார் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb thread in Erode Bus stand


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->