டாஸ்மாக் கடையை மூடக்கோரி பா.ஜ.கவினர் போராட்டம்.. 35 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் கிராமத்திற்கு செல்லும் ரயில்வே தண்டபாளை சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி மாவட்ட தலைவரும் வண்டலூர் ஊராட்சி மன்ற உறுப்பினருமான டேனியல் தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் பாஜகவை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்து வண்டலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP protest against tasmac in ooteri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->