#வேலூர் || மருத்துவர் மீது கொடூர தாக்குதல்.. பெண்ணால் போர்க்களமான அரசு மருத்துவமனை.!! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயிலும் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய பெண் நோயாளி மற்றும் அவருடைய உறவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த சுபா என்பவர் பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரைப் பார்ப்பதற்காக அவருடைய உறவினர் ஒருவர் சுபாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசி உள்ளார். அப்போது பரிசோதனைக்காக சென்ற விஷால் என்ற மருத்துவர் இது பெண்களுக்குரிய வார்த்தை என்றும் நீண்ட நேரம் இங்கு இருக்கக் கூடாது எனவும் கூறியதாக தெரிய வருகிறது. 

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியதில் மருத்துவர் விஷால் பெண் நோயாளி சுபா மற்றும் அவருடைய ஆண் உறவினர் ஆகிய மூன்று பேரும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நோயாளி சுப மற்றும் அவருடைய உறவினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on govt doctor in Vellore govt hospital


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->