தினமும் குடி.. தெருவில் வீண் சண்டை.. தாய், மனைவி, மகன் என மூவரின் வாழ்க்கை கேள்விக்குறியான பரிதாபம்.!!
Ariyalur man murder by Mom, Wife and son due to liquor drinking and torture
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் மேலவெளி பகுதியை சார்ந்தவர் ராஜசேகர் (வயது 47). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகுணா (வயது 37). இவர்கள் இருவருக்கும் ரவிவர்மன் (வயது 19) என்ற மகனும், ராகேஷ் வர்மன் என்ற மகனும் இருக்கின்றனர். சுகுணா பெரம்பலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ரவிவர்மன் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். ராகேஷ் வர்மன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ராஜசேகரின் தந்தை முருகேன்சன் வருமான வரித்துறையின் பணியாற்றி ஓய்வு பெற்று இயற்கையை எய்தியுள்ளார். ராஜசேகரின் தாய் செல்வி (வயது 65), தனது கணவர் முருகேசனின் ஓய்வூதியத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
தினமும் மது அருந்துவதற்காக ராஜசேகர் தனது தாய் மற்றும் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், சில நேரங்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்பனை செய்தும் மது அருந்தி வந்துள்ளார். இதுமட்டுமல்லாது ஊர் பொதுமக்களிடம் தகராறும் செய்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மது போதையில் ராஜசேகர் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவருகிறது.
இதன்பின்னரும் தொடர்ந்து பணம் கேட்டு ராஜசேகர் தொந்தரவு செய்து வரவே, செல்வி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி, இது குறித்து சுகுணா மற்றும் ரவிவர்மனிடம் கூறியுள்ளார். இதனால் மூவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதன்படி, நேற்று முன்தினம் இரவில் ராஜசேகரை கட்டிப்போட்டு, பூச்சி மருந்தை வாய் மற்றும் காதுகளில் ஊற்றி கொலை செய்துள்ளனர்.
பின்னர் ராஜசேகர் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளையில் கொலை சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து செல்வி, சுகுணா மற்றும் ரவி வர்மனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur man murder by Mom, Wife and son due to liquor drinking and torture