சிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் கொண்ட அரவிந்த் அடிகா.. பிறந்த தினம்!!
aravind adiga birthday
அரவிந்த் அடிகா:
சிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் ஒருங்கே பெற்ற அரவிந்த் அடிகா 1974ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
இவர் 1990ஆம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
இவரது முதல் புதினம் தி ஒயிட் டைகர் (The white tiger) 2008ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசு பெற்றது. இவர், நாவல்கள் மட்டுமல்லாமல் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்குகிறார்.
முக்கிய நிகழ்வுகள்:
1920ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சூறாவளி காற்றின் வலிமையை அளவிடும் (ஃபுஜிதா அளவீடு) நுட்பத்தைக் கண்டறிந்த ஃபுஜிதா டெட்சுயா (fujita tetsuya) ஜப்பானில் பிறந்தார்.
1911ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது.