திருமணத்திற்கு வேறு ஒரு பெண்; உல்லாசத்திற்கு காதலி;வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


 திருமண ஆசைவார்த்தைகள் கூறி தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான ரிஷி ஜோதிகுமார். இவர் நீலாங்கரையில் உள்ள தனியார்  ஆஸ்பத்திரியில் டெக்னிஷியனாக வேலை செய்து வருகிறார். அப்போது பாலவாக்கத்தில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்தில் வேலை செய்யும் 29 வயது இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியதாக தெரிகிறது.

இதையடுத்து ரிஷி ஜோதிகுமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை இருவரும் உல்லாசமாக இருந்ததால் இளம்பெண் கர்ப்பமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த   ரிஷி ஜோதிகுமார் பின்னர் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு கருவை கலைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.அதன்பிறகு ரிஷி ஜோதிகுமார், அந்த பெண்ணுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்தார். ஒருகட்டத்தில் இதனால் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது, ரிஷி ஜோதிகுமார் அவரை திருமணம் செய்ய மறுத்ததுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து திருமண ஆசைவார்த்தைகள் கூறி தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்த ரிஷி ஜோதிகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரங்கிமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண் கூறிய புகார் உண்மையென தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ரிஷி ஜோதிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another woman for marriage a girlfriend for enjoyment the shocking surprise awaited for the young man


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->