கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!
Announcement that data has been downloaded from the black box
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உலகையே உலுக்கிய இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர்.இதையடுத்து மீட்ப்பு பணிகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.
கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு இதை மறுத்தது.இந்த நிலையில் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. சிவிஆர் மற்றும் எஃப்.டி.ஆர். ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் தலைவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
Announcement that data has been downloaded from the black box