அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! அண்ணாமலை அடித்த முதல் கமெண்ட்!
Annamalai Say About ADMK break Alliance BJP
அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் அதிமுக தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக, பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பின்பு பேட்டி அளித்தனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் இன்று பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்க்கு அண்ணாமலை, “நான் உங்களுடன் பிறகு பேசுவேன், யாத்திரையின் போது அரசியல் பேச மாட்டேன், பிறகு பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் 10 நிமிடம் கழித்து அண்ணாமலையை சூழ்ந்துகொண்டு செய்தியாளர்கள் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினர்.
அப்போது அண்ணாமலை தெரிவிக்கையில், "என் மண், என் மக்கள் யாத்திரை கோயம்புத்தூர் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது அதிகமாக பேசுவதற்கு எனக்கு நேரமில்லை.
எதிர்காலத்தில் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்கிறேன். இன்று நான் கூறும் ஒரே கருத்து என்னவென்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் விடுத்துள்ள அறிக்கையை நான் படித்தேன்.
மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து எங்களின் தேசிய தலைமை பேசுவார்கள். சரியான நேரத்தில் பேசுவார்கள். இதுதான் இன்றைக்கு எங்களுடைய முதல் கருத்து.
பாஜகவை பொறுத்தவரை இது தேசியக் கட்சி. எங்களுக்கென்று ஒரு வழிமுறைகள் உள்ளது. எங்கள் கட்சிக்கு தேசியத் தலைவர் இது குறித்து பேசுவார்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
English Summary
Annamalai Say About ADMK break Alliance BJP