அரசியலை விட்டு விலகி விடுகிறேன் - பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


கோவை மக்களவைத் தொகுதி பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது  அவர் பேசியதாவதுல்:- ”கோவை மாநகரில் ஏராளமான பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 மீட்டருக்கு நடந்து சென்றால், சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. 

இதையெல்லாம் திமுகவினர் சரி செய்யவில்லை. பாஜக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். இதைக் கேட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்”

மேலும், கிரிக்கெட் மைதானம் எதற்காக காட்டப்படுகிறது என்றால் ரூ.4,000 கோடி வரை கமிஷன் அடிக்கலாம் என்பதற்காகத்தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் நடந்து சென்றால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையை மேம்படுத்த ரூ.1,445 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், கோவையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

annamalai election campaighn in coimbatore


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->