பாறையில் இருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ. மாணவன் பலி! - Seithipunal
Seithipunal


நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பாறையில் இருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ. மாணவன் பலியான சம்பவம் திருவனந்தபுரம் வேளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வேளி பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவன் ஆதித்யன்,இவர் திருவனந்தபுரம் பகுதியில் ஐ.டி.ஐ படித்து வந்தார்.இந்நிலையில், ஆதித்யன் நேற்று முன்தினம் சம்பவத்தன்று நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்று அங்குள்ள  கருப்பையாற்றில் இறங்கி அனைவரும் குளித்தனர்.

அப்போது பாறைகள் நிறைந்த கடையால் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அணைமுகம் வழியாக பாய்ந்து செல்லும் கருப்பையாற்றின் தொடக்க பகுதியில்  இடத்தில் அந்த வாலிபர்கள் ஆனந்த குளியல் போட்டு உற்சாகத்தில் திகைத்தனர்.

அந்த நேரத்தில் ஐ.டி.ஐ. மாணவன் ஆதித்யன் ஒரு பாறையில் மீது  ஏறிய போது எதிர்பாராதவிதமாக கால் தவறி பாறையில் விழுந்து  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உடன் வந்த நண்பர்கள் அவரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆதித்யன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பாறையில் இருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ. மாணவன் பலியான சம்பவம் திருவனந்தபுரம் வேளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An ITI student fell from a rock and died


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->