மாணவர்களுடன் நேரடி காணொளி! ஜூலை 15 -ம் தேதி முதலைமைச்சர் கலந்துரையாடல்...! காரணம் என்ன ? - Seithipunal
Seithipunal


கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 6,329 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் நாட்டின் வளச்சிக்கேற்றப்படி, பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் செயல்பாடுகளுக்காக அதிவேக இணையதள வசதிகளும் தற்போது பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு தொடர்பான கூடுதல் வழிமுறைகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், கெல்ட்ரான் மூலம் வழங்கப்பட்ட அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தினந்தோறும் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

இதில் கணினி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி மாநிலத் திட்ட அலுவலகத்திலிருந்து காணொலி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Live video with students Chief Ministers discussion on July 15th What is the reason


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->