செஸ் எதிர்காலமே! குறிப்பிடத்தக்க திறமை, உறுதியுடன் பிரகாசித்து வருகிறார் குகேஷ்...!- முதலமைச்சர் பாராட்டு - Seithipunal
Seithipunal


நார்வே நாட்டைச் சேர்ந்த ''மேக்னஸ் கார்ல்சன்'' நார்வே செஸ்(2025 ) தொடரில் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இதில் இறுதிச்சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில், அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய தமிழ்நாட்டு வீரர் 'குகேஷ்', செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்குச் சென்றார்.

மேலும், இந்த 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், இந்தியாவைச் சேர்ந்த 'குகேஷ்' 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டதாவது," 2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் 3 வது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம்.

குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

future chess Kukesh is shining with remarkable talent and determination Chief Minister praises


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->