#Breaking: தமிழில் பேச முடியாதது வருத்தம்.. அமித் ஷா நெகிழ்ச்சி பேச்சு.!
Amith Shah Speech Chennai Kalaivanar Arangam 21 November 2020
சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்த அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர்.
இதன்பின்னர், தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், மாலை தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார். 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணி தொடரும். தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழியில் பேச முடியாததற்கு எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில், இந்தியா கொரோனாவுடன் போராடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள், முதல்வர், துணை முதல்வர், அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Amith Shah Speech Chennai Kalaivanar Arangam 21 November 2020