வீடியோ! சென்னையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வேடமிட்டு பெண் நோயாளியிடம் நகை பறிப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னையில் மருத்துவர் வேடமிட்டு பெண் நோயாளியிடம் நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லக்கூடிய ராஜீவ் காந்தி தமிழக அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்த பெண் நோயாளி ஒருவர் வந்துள்ளார்.

அப்போது கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு தன்னை மருத்துவர் போல காட்டிக் கொண்டு வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண் நோயாளி அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி உள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாக்காத அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், இது குறித்து செய்தி ஊடகங்களுக்கும் பேட்டி அளித்துள்ளார். 

அந்த பேட்டியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிமுக ஐடி விங்க், "கேடுகெட்ட திமுக ஆட்சியில்  சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி  நோயாளிடமிருந்து 3 சவரன் நகையை வாங்கி கொண்டுபோலி மருத்துவர் ஓட்டம்!!

ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது என்றால் தமிழகத்தில்  சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா???? என்று கடுமையாக விமர்சித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Condemn to DMK Govt Govt Hospital chain snatching


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->