270 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகம்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் புகழ் பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில்  திருவாங்கூர் அரச குடும்பத்தின் தலைவராக உள்ள மூலம் திருநாள் ராம வர்மா மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

கேரளாவில் புகழ் பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் புதுப்பிக்கும் பணியானது சமீபத்தில் நிறைவடைந்தது.இதையடுத்து இந்த பழமையான கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை புரோகிதர்கள் சடங்குகளை செய்தனர்.இதில்  திருவாங்கூர் அரச குடும்பத்தின் தலைவராக உள்ள மூலம் திருநாள் ராம வர்மா, கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் இந்த சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.முதலில் அஷ்டபந்த கலசம் பூஜை திருவம்பதி கோவிலில் நடந்தது.
அப்போது இதில்  அரச குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். 

அதனை தொடர்ந்து காலை 8 மணியளவில்  300 ஆண்டுகள் பழமை வாய்ந்தத விஷ்வக்சேனா சிலையை மீண்டும் நிறுவும் பணி நடைபெற்றது. இதன்பின்பு தந்திரிகள், புரோகிதர்கள் ஆகியோருடன் அரச குடும்ப தலைவர் ஆகியோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, பக்தர்கள் நாராயண மந்திரம் உச்சரித்தனர். இந்த அரிய சடங்கு நிகழ்ச்சியில் கேரள கவர்னர் விஷ்வநாத் ராஜேந்திர அர்லேகரும் கலந்து கொண்டார்.

இந்த சடங்கை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில், 4 நுழைவு வாயில்களிலும் வீடியோ காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்வதற்காக, காலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After 270 years the Maha Kumbhabhishekam took place at the Sri Padmanabhaswamy Temple


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!


செய்திகள்



Seithipunal
--> -->