கொரோனாவால் மீண்டும் அதிமுகவில் ஒரு பலி.! மிகுந்த அதிர்ச்சியில் கழகத்தினர்.!
Admk namakkal admin death by corona
கடந்த 13ஆம் தேதி மூச்சு திணறலால் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் துரைக்கண்ணு விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.திடீரென அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
கொரோனா தொற்று காரணமாக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவரும், அதிமுக ஒன்றிய செயலாளருமான வரதராஜ் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பது அக்கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Admk namakkal admin death by corona