பஞ்சாப்பில் பயங்கரம்; காதலித்த பெண்ணுக்கு வேறொருடன் திருமணம் நிச்சயம்; இளம்பெண் 34 முறை கத்தியால் குத்தி கொலை..!
Young woman in Punjab stabbed to death 34 times after her marriage to another man was arranged
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவைச் சேர்ந்த 29 வயதான டிம்பிள் என்ற பெண் மொகாலியில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஹரிந்தர் சிங் மானும், டிம்பிளும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட்டுள்ளது. இதனால், டிம்பிளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதையறிந்து ஆத்திரம் அடைந்த ஹரிந்தர் சிங், மொகாலி அலுவலகத்தில் டிம்பிள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது அறைக்குள் நுழைந்து, கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். அத்துடன், ஹரிந்தர் தனது கழுத்தில் கத்தியால் 10 முறை குத்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் டிம்பிள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவருடைய உடலில் 34 இடங்களில் கத்திக் குத்துகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிந்தர் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
English Summary
Young woman in Punjab stabbed to death 34 times after her marriage to another man was arranged