ஒரே கட்சி ஒரே கொள்கை கொண்டவர்களுக்கு பிரசாரம்..! நடிகர் வையாபுரி அதிரடி! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வையாபுரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் திரைப்பட சூட்டிங் இல்லாமல் இருந்தால் நிச்சயம் ஒரே கட்சி ஒரே கொள்கை என இருக்கும் அ.தி.மு.கவிற்கு தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். 

எனது பிரசாரம் பிற கட்சியினர் அல்லது பிற நபர்களை வசப்படுத்துவது போல இருக்காது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்கள், புரட்சித்தலைவர் தமிழர் எடப்பாடி மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்களை எடுத்துரைக்கும் தேர்தல் பிரச்சாரமாக இருக்கும். 

பாசக்கார ஊர் என்றால் அது மதுரை. நான் பிறந்த ஊர் மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்பேன். 

படப்பிடிப்பு இல்லாமல் இருந்தால் நிச்சயம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இந்நிலையில் கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரை உலகத்திற்குள் வருகின்றனர். 

வில்லன்கள் காமெடியன் ஆகிவிட்டார்கள் காமெடியார்கள் வில்லன்களாகி விட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகனாக கூட நடிப்பேன் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Vayapuri interview in Madurai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->