சாய்னா நேவாலிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்.!!
actor siddharth apology letter to saina nehwal
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகனங்களும் அணிவகுத்து சென்றது. ஆனால், வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. 20 நிமிடம் காத்திருந்த நிலையில் மாற்றமில்லை. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே சாய்னா நேவால் தனது ட்வீட்டர் பக்கத்தில், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சித்தார்த்தின் பதிவிற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் பதிவிட்ட டுவிட்டிற்கு பதிலாக நான் பதிவிட்ட மூர்க்கத்தனமான டுவிட்டிற்கு பதிவிற்கு மன்னிப்பு கோருகிறேன்.
நகைச்சுவை பொறுத்தவரை, புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், அது நகைச்சுவை இல்லை. சரியாக புரிந்து கொள்ள முடியாத படியாக நான் பதிவிட்ட நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தை விட்டுவிட்டு எனது இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதும் எனது வெற்றியாளர் தான் என பதிவிட்டுள்ளார்.
English Summary
actor siddharth apology letter to saina nehwal