ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகர் ரஜினிகாந்த்.!! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக 18 வது நாடாளுமன்ற பொது தேர்தல் கலைக்கட்டியுள்ளது. இன்று முதல் வரும் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

முதற்கட்டமாக இன்று 21 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் திரைத்துறையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அஜித்குமார் தனது ஜனநாயக கடமையை முதல் ஆளாக ஆற்றினார். அதே போன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Rajinikanth cast is vote in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->